Saturday, April 16, 2011

தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.



அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

*

2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

*

3. வயிற்றுப் புண் குணமாகும்.

*

4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

*

5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

*

6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

*

7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

*

8. மலச்சிக்கல் நீங்கும்.

*

9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

*

10. உடல் இளைக்க உதவும்

*

11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

*

12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

*

13. மூட்டு வலி நீங்கும்.


*

14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

*

15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

*

16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

*

17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

*

18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

*

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.


***
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment:

  1. பயனுள்ள தகவல்
    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete